Tuesday 27 September 2011

உயிரே உன் விலை என்ன?


             

''அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது''

என்று சொன்னார் அவ்வை மூதாட்டி. இந்த அரிதான மானிடப் பிறவியின் அருமையை நம்மில் பெரும்பாலோர் உணர்வதில்லை.


தற்கொலை


இந்த பிரபஞ்சத்தில், எந்த கோள்களிலும் அமையப்பெறாத பரிணாம வளர்ச்சியின் உச்சமாக,சிரித்து வாழக்கூடிய, உணர்ச்சிகள் நிறைந்த, எதையும் பகுத்தறியக்கூடிய 6-வது அறிவை பெற்ற நாம், நமது இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் தற்கொலைப் போக்கு நாளுக்கு நாள் நாட்டுக்கு நாடு அதிகரித்து வருகிறது. 


இதற்கு என்ன காரணம்?,

முதலில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதது ஒரு காரணம்.இரண்டாவது,சில மதிகெட்டவர்களின் மன நிலை கெடுதல்.மூன்றாவது,மனிதன் தன்னை பாதுகாத்து கொள்ளுதல் போல் அழித்துக் கொள்ளுதலும் இயற்கையான செயல் என்று எண்ணுவது.

காரணங்கள்


                  அச்சம், கவலை, பற்றாகுறை, தாழ்வு மனப்பான்மை, விரோதம், குற்ற உணர்வு,விவாகரத்து, குடும்ப உறவுகளை அழித்தல், விலைவாசி, பொருளாதார நெருக்கடி, போதைப் பழக்கம், பால் உறவின் தவறான வழி, இளங்குற்றவாளி,பித்துப்பிடித்தல்,நோய், இவை அனைத்தும் பல நேரத்தில் தற்கொலையில் முடிகிறது.வயிற்று வலி, வறுமை, தேர்வில் தோல்வி, ஆசிரியர் திட்டுதல், பெற்றோர் திட்டுதல், அவமானம், ஈவ்டீசிங், அடக்குமுறை, கடன் தொல்லை,வியாபாரத்தில் தோல்வி, காதல் தோல்வி, கள்ளக் காதல், மணமுறிவு,திருமண ஏக்கம், குழந்தை இல்லாத ஏக்கம், குடும்ப பிரச்சனை, வரதட்சணை கொடுமை, இப்படி பல்வேறு காரணங்களாலும், தற்கொலைகள் நடக்கின்றன.

ஈவ்டீசிங்


நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் பெண்கள்,மாணவிகள் ஈவ்டீசிங் கொடுமைக்கு ஆளாகின்றனர்.அவர்களில் 5 சதவீதம் பேர் வெளியில் சொல்ல முடியாத துயரங்களால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

கள்ளக் காதல்


கள்ளக் காதலால் வாழ்கையை முடித்துக் கொள்வோரும் பெருகி வருகிறார்கள்.அவர்கள் மன நல நிபுணரிடம் தக்க ஆலோசனை பெற்றால் தற்கொலைகளை தடுக்கலாம்.

''தற்க்காத்து தற்கொண்டாற் பேணி'' என்ற குறள் வரிக்கேற்ப ஆணும்,
பெண்ணும் கற்பு நெறியோடு வாழ வேண்டும்.


நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்.
சாகப் பிறந்தவர்கள் அல்ல.

தவிர்க்கும் வழிவகைகள்


பொதுவாக தற்கொலை எண்ணம் ஏற்படும் ஒருவரை நன்கு கவனிக்க வேண்டும்.அவர்களுக்கு சிறந்த நட்பை ஏற்படுத்த வேண்டும்.எந்த பிரச்சனைக்கும் பேச்சிவார்த்தை மூலம் தீர்வு காண முடியும்.அடிக்கடி மாறுபட்ட கருத்துக்களுக்கு இடம் கொடுக்காமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தகுந்த நேரத்தில் தகுந்த ஆலோசனை வழங்கினால் சமூகத்தையே காப்பாற்ற முடியும்.


தியானம்,மனோபாவத்தை மாற்றிக் கொள்ளுதல்,தன்னம்பிக்கையை வளர்த்தல்,பிரச்சனைகளை கையாளும் திறன்,சமூகத்தின் போக்கு பற்றிய அறிவு,மனதிற்கு ஓய்வு கொடுத்தல்,ஆகியவற்றின் மூலமும் தற்கொலைகளை தடுக்கலாம்.


''என் கடன் பணி செய்து கிடப்பதே;


என்று வீட்டுக்காகவும்,நாட்டுக்காகவும் தன்னை அற்பணித்தவர்களின் வாழ்கையை உதாரணமாக எடுத்துக் கொண்டு வலிமை பெற வேண்டும்.அந்த வலிமை வாழ்க்கையை வளமாக்கும்.

உயிரே உன் விலை என்ன? என்பதை சிந்திப்போமாக!


தகவல்
சி.குணசேகரன்,
ஆசிரியர்,
அரசு மகளீர் மேல்நிலைப்பள்ளி,
உடையார் பாளையம்,
அரியலூர்.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

நம் நட்பு


நம் நட்பு !!!

ஊனை திரியாக்கி
உயிரில் விளக்கேற்றும் - சக்தி
காதலுக்கு மட்டும் அல்ல
நம் நட்புக்கும் உண்டு !

என் அருகில் நீ இருக்கும் போது
மகிழ்ச்சியின் எல்லையில் இருப்பேன்
கடிகார முள் கூட வேகமா சுற்றும்
உன் பிரிவு எனை வாட்டும் போது
சோகத்தின் சகோதரி ஆகுறேன்
கடிகாரம் கூட ஓட மறுக்கும்
விந்தையை நம் நட்பில் காண்கிறேன்!

நான் பேச நினைப்பதை நீ பேசுவதும்
நீ பேச நினைப்பதை
நான் பேசும் வேடிக்கையை - எண்ணி
ரசித்த நாட்கள் எத்தனை?
ஆழியில் கண்டெடுத்த முத்தைப்போல்
என் வாழ்வில் கிடைத்தது
உன் நட்பு ..!

என்னுடன் நீ இருக்கும்
ஒவ்வொரு மணித்துளியும்
என் வாழ்வில் கிடைத்த வசந்தங்கள்
இந்த வசந்தங்கள் - என்
மரண படுக்கையிலும் வேண்டும் !
வசந்தம் தருவாயா என் நட்பே ...?

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

Sunday 25 September 2011

சிறுகதை


கேட்காமலே!....

                 மீதமிருப்பது முழுசாய் 50 நிமிடங்கள் மட்டுமே இன்னமும் 40.000/-வேண்டும்...முடிந்ததை புரட்டியாச்சு.எல்லோரிடமும் கேட்டாச்சி.

             உனக்குத்தான் இந்த காண்டிராக்ட்.நாளை காலை 11.30 மணிக்கு 'டெப்பாசிட்' தொகையுடன் வந்து விடு.இனி உன் கம்பெனிக்கு ஆள் பத்தாது...இடம் பத்தாது...பெரிய ஆளாய் மாறப்போகிறாய்...புது மாப்பிள்ளை வேற...கலியாணம் ஆன கையோட யோகம் நீ இனி பெரிய ஆளாக மாறப்போகிறாய்.பில் செட்டில்மெண்டை எல்லாம் நான் பார்த்துக்கறேன்.எத்தனை நம்பிக்கையான வார்த்தைகள்.என்றோ ஒரு நாள் நான் செய்த உதவிக்கு இத்தனை தூரம் இறங்கி வந்து கைகொடுக்க முன்வந்தும் என்னால் பயன்படுத்திக்கொள்ள இயலவில்லையே கண்களை மூடி கவிழ்ந்திருந்தேன்.

      'பொன்மகள் வந்தால்'...பொருத்தமில்லா பாட்டு FM-ல் ஒலித்துக்கொண்டிருக்க ஆபீஸ் ஸ்டெனோ இடைமறித்தாள்.சன்னமான குறலில் வரச்சொல் என்றேன் நிமிராமலேயே!...

        மெதுவாக கண் திறந்தேன் கட்டுக்கட்டாய் காந்தி சிரித்தார்...ஒரு நாற்பது ஐம்பது தேறும்..விழிகள் விரிய பார்வை வீசினேன்.மஞ்சள் கயிற்றுடன் மட்டும்...மங்களமாய் மின்னினாள் என் தங்கலெட்சுமி.

படைப்பு

ச.பரமேஸ்வரன்
கணித ஆசிரியர்
பா.தொ.ந.உ.கழக
மேல்நிலைப்பள்ளி
விக்கிரமசிங்கபுரம்
திருநெல்வேலி.

Admin:-

தங்களது படைப்புக்கு மிக்க நன்றி.தொடர்ந்து தங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

Saturday 24 September 2011

கவிதை முத்துக்கள்



தாயினும்
தாலாட்டும்
சிறந்த ஆசிரியர்கள்.

மாணவர்களின் பார்வை
அர்த்த நாரீஸ்வரராக
துடிக்கிறது.

மனதில்
ரணகளத்துடன்
மாணவிகள்.

மூன்று முக்கிலும்
நூலாம்படையில்
எட்டு கால் பூச்சிகளின் நடனம்.

தன் கடமையை
சரியாக செய்யும் இரண்டு
மின்விசிறிகள்.

இப்படியாக
'ஒளி'வீச துடிக்கும்
எங்களின்
எதிர்காலம்
இந்த
''வகுப்பறை''




விந்தை


அறிவியல்
உலகத்தில்
தமிழ்
பெண் ஒருத்தி
சோசியலாக
பழகினால் சமூகம்
கணக்கு
போட்டு பார்த்தது 
அவள்
ஆங்கில 
பெண் என்று.


காதலர் உள்ளம்


தோண்ட தோண்ட 
போய்க் கொண்டிருக்கும்
'புதைக் குழி'


ஆற்று வெள்ளத்தில் 
அடித்து செல்லப்பட்ட 
'கூழாங்கல்'


கனத்த மழையில்
கரைந்து போன 
'செம்மண் சுவர்'


புயல் அடித்த போது
உடைந்து போன
'குடிசை'
காதலர் உள்ளம்.


ஹைக்கூ 

வறுமை

உண்ண
அரிசியில்லை 
கடைசியில் 
'வாய்க்கரிசி'.

மொட்டுகள்
பூ,
விற்கிறது 
சாலையில்.

லஞ்சம்

ஆளுங்கட்சிக்கு 
வளர்பிறை 
எதிர்கட்சிக்கு 
தேய்பிறை.

'மழை'

மனிதனைப் பார்த்து 
தெய்வமிடும்
'கண்ணீர்'





படைப்பு 

கோ.சங்கரசுப்ரமணியன் 
ஓவிய ஆசிரியர்
பா.தொ.ந.உ.கழக
மேல்நிலைப்பள்ளி 
விக்கிரமசிங்கபுரம்
திருநெல்வேலி .

Admin:

தங்களது படைப்பிற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் மேலும் தங்களது சிறந்த படைப்புகளை வரவேற்கிறோம்.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

Tuesday 20 September 2011

கவிதை மொட்டுக்கள்











































































































































































Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

Sunday 18 September 2011

தமிழின் பெருமைகள்


                 உலகில் சுமார் 6 ஆயிரம் மொழிகள் பழக்கத்தில் உள்ளன.அத்தனை மொழிகளிலும் 6 மொழிகள் தான் உலகத்திற்கு நாகரீகம் சொல்லிக்கொடுத்த பாரம்பரியம் உடைய மொழிகள்.அவற்றில் தமிழ்,சீனம்,அண்மையில் ஹூப்ரு ஆகிய மொழிகள்தான் அறிவியல் யுகத்துக்கும் ஈடுகொடுத்து தம்மைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன. பாடம் கற்கிற ஊடகமாகவும்,பயன்பாட்டுக்குரிய வாழ்க்கை மொழியாகவும்,தமிழ் நமக்கு வாய்த்திருக்கும் பெருமையை இன்னும் முழுமையாக நாம் உணரவில்லை.ஆனால் உலகம் நன்றாக உணர்ந்திருக்கிறது.ஒரு மாநிலத்திற்குரிய மொழியாக இல்லாமல் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் பேசும் உலக மொழியாகவே, சர்வதேச அளவில் தமிழ் மதிக்கப்படுகிறது.அதற்கு சாட்சியாக உலகம் முழுவதும் 40 மொழிகளில் தனது தனது ஒலிப்பரப்பைச் செய்கிற பி.பி.சி நிறுவனம் இந்தியமொழிகளில் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் மட்டுமே ஒலிபரப்பைச் செய்கிறது.42 மொழிகளில் ஒளிபரப்புச் செய்யும் சீன வானொலியும் இந்த இரண்டு மொழிகளுக்கு மட்டும் பெருமையளிக்கிறது.சர்வதேச மொழிகளில் வெளியாகும் யுனெஸ்கோ கூரியர் பத்திரிக்கை இந்திய மொழிகளில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வெளியாகிறது.உலக வரைபடத்தில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.இலங்கை,சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகவே இருக்கிறது.ஜெருசலத்தில் உள்ள ஒலிவமலை தேவாலயத்தில் 68 மொழிகளில் எழுதப்பட்டுள்ள ஏசு அருளிய ஜெபம்,இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது.தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில்,தமிழ் வருடங்கள் அறுபதையும் குறிக்கும் வகையில் படிக்கட்டுகளுக்கு பிரபவ முதல் அட்சய வரையிலான பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இன்று சர்வ வல்லமை பெற்றுள்ள இணைய தளத்தில் அதிகம் பயன்படுத்தப்படும்,பயன்பாட்டு மொழியாக இந்திய மொழிகளில்,ஏறத்தாழ தமிழ் முதலிடம் வகிக்கிறது என்பது பெருமைப்படத்தக்கது.

செம்மொழி

            காலத்தால் அளவிட இயலாத தொன்மை வாய்ந்த தமிழ் இயல்,இசை,நாடகம் எனும் மூன்று பிரிவுகளாக வளர்ந்துள்ளது.பல்வேறு வரிவடிவங்களைப் பெற்று,வளர்ந்து தெலுங்கு,மலையாளம்,கன்னடம் எனும் மொழிகளை உருவாக்கி இன்று செம்மொழி எனும் அடைமொழியும் பெற்று இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் தமிழ் மொழி நம் தாய் மொழி எனும் பெருமை அளவிட இயலாதது.சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் குகைகளிலும்,கற்ப்பாறைகளிலும் கல்வெட்டாகவும்,பின்னர் செப்புத் தகடுகளிலும்,அதன்பின் எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடிகளிலும் எழுதப்பட்டு வந்த தமிழின் வரிவடிவம் 1930-க்குப் பின் காகிதங்களிலும் அச்சிடப்பட்டு வருகிறது.மேலும் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து கணிணி பயன்பாட்டிலும் உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தாய்மொழியாம் தமிழ்வழிக்கல்வி இன்னும் தமிழை வளர்க்கும் என்பது தெள்ளத் தெளிவு.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

Tuesday 13 September 2011

தினம் ஒரு குறள்




"உணலினும் உண்டது அறல்இனிது;காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
                                                           குறள் 1326


பொருள்:-

                     மேலும் மேலும் சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை விட,முதலில் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதே இன்பம் தரும்.அதுபோல காதல் வாழ்க்கையில் மேலும் மேலும் கூடி இணைந்திருப்பதை காட்டிலும் அவ்வப்போது ஊடல் கொண்ட பிறகு ஏங்கி எதிர் பார்த்திருக்கும் காதலே மிகுந்த இன்பத்தை தரும்.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

ஆன்மீக சிந்தனை


         மனிதர்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள்,அவர்களைப் பெரிதும் பாதிக்கின்றன.அதனால் தெய்வீக படங்களை நாம் இருக்கும் இடத்தில் எப்போதும் கண்ணில்படும் வகையில் வைத்திருப்பது நல்லது.அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும்.
                 -பகவான் இராமகிருஷ்ணபரமஹம்சர்.






       உங்கள் இருதயம் துவளாமலும்,தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.

                                             -எரேமியா 51:46




                    
      வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே உரிமையாளன்.அவன் உயிரை வழங்குகிறான்.மரணத்தை அளிக்கிறான்.மேலும் அவன் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவனாக இருக்கிறான்.


                                                                     
                                         -திருக்குர்ஆன் 57:2

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

Videos(Clik Play Button)

Popular Posts

 

உதிரிப்பூக்கள் Copyright © 2011 Designed by Mydeen